search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.
    • அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் கடுமையாக தாக்கி உள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கேள்வி:- கூட்டணி அமைப்பது தொடர்பாக உங்களுக்கும், உங்களது தந்தைக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதே?

    பதில்:- அது அ.தி.மு.க. உருவாக்கிய புரளி. நானும், எனது தந்தையும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதை எப்போதோ தீர்மானித்து விட்டோம். அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை.

    எனது தந்தையை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசிய பிறகுதான் இந்த புரளி கிளம்பியது.

    கேள்வி:- பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க என்ன காரணம்?

    பதில்:- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்து பட்டதுபோதும். இதை கருத்தில் கொண்டுதான் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

    கேள்வி:- அடிக்கடி கூட்டணி மாறுவதால் உங்கள் கட்சி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பபடுமே?

    பதில்:- எந்த கூட்டணி என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக பாடுபட்டு உள்ளது. இதை எந்த கட்சியும் மறுக்க இயலாது. நாங்களாக ஒருபோதும் கூட்டணியை மாற்றிக் கொள்வது இல்லை. உண்மையில் தி.மு.க., அ.தி.மு.க.வால்தான் நாங்கள் கூட்டணியில் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. எங்களது கூட்டணி நிச்சயம் அதிகாரத்துக்கு வரும்.

    கேள்வி:- மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளது. அது உங்கள் கொள்கைக்கு மாறுபட்டதாக கருதப்படுகிறதே?

    பதில்:-சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாக மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் சில மாநிலங்களில் ஆதாயத்துக்காக கணக்கெடுப்பு பற்றி பேசியது.

    தற்போதைய கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தான் மூத்த தலைவர். அவர் பிரதமரிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நல்ல தீர்வு காண்பார்.

    சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- எங்களது கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாற்று அணி உருவெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். அந்த தேர்தலின் போது நாங்கள் மிக பிரமாண்டமான அணியை உருவாக்குவோம்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக இப்போதே என்னால் சொல்ல முடியும்.

    கேள்வி:- பா.ம.க. உங்களை முன் நிறுத்தினாலும் தமிழகம் முழுக்க ஆதரவு கிடைக்குமா?

    பதில்:- வன்னியர் சங்கம் அடிப்படையில்தான் பா.ம.க. உருவானது. ஆனால் நாளடைவில் அதில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தலித்தான் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.

    இப்போது பா.ம.க. மீதான மக்கள் எண்ணம் மாறி வருகிறது. தமிழக மக்கள் அன்புமணியை ஒரு வன்னியர் தலைவராக மட்டும் பார்ப்பது கிடையாது. படித்தவர், டாக்டர், நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற கோணத்தில்தான் பார்க்கிறார்கள்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நீங்கள் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளதா?

    பதில்:- இல்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசிய போது மத்திய மந்திரி பதவி பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. அது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் மாநில அரசியலில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

    எனது மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அவர் மிக சிறந்த எம்.பி.யாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
    • இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிகளைக் குவிப்பதற்காக களத்தில் நீ கொடுக்கும் உழைப்பையும், நீ காட்டும் உறுதியையும் நினைத்து மனம் நெகிழ்ந்து போய், உன்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை நான் வரைகிறேன்.

    பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்ட மக்களவைத் தேர்தல்களில் இருந்து இந்தத் தேர்தல் முற்றிலும் மாறானது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்று மார்தட்டி வந்த அ.தி.மு.க.வையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணியை அமைத்து, புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம்.

    இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நான் கூறுவதற்கு பதவிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமல்ல. மாறாக, தடைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்ற வேட்கை தான் காரணம் ஆகும்.


    தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என்று இரு கட்சிகளும் மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக்கொள்கின்றன. ஆனால், அவர்களின் அடிமனதில் பா.ம.க. மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியைக் கண்டு பெரும் அச்சம் நிலவுகிறது. அவர்களின் அச்சத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்; நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதுவே நமது இலக்கு.

    அந்த இலக்கை அடைவதற்காக இப்போது கடுமையாக உழைக்கும் பாட்டாளி இளஞ்சிங்கங்கள் அனைவரும் இனி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். நமது வேட்பாளர்களாலும், கூட்டணியின் வேட்பாளர்களாலும் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் செல்வது சாத்தியமல்ல. நீங்கள் தான் காடுகளையும், மேடுகளையும், ஆறுகளையும், மலைகளையும் கடந்து சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.

    அந்த ஆதரவின் உதவியுடன் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி தேனாக நம் செவிகளில் பாய வேண்டும். அதற்காக இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள். அது தான் எனது 45 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.
    • உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக பற்று கொண்ட மோடி தமிழராகவே செயல்படுகிறார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.

    எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படாததற்கு காரணம் எதிர்க்கட்சிகள் தான். மருத்துவமனை வருவதற்கு துணை நிற்காமல், வராமல் இருப்பதற்கு துணை நிற்கிறார்கள். ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக வரும். அதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார்.

    கச்சத்தீவு பிரச்சனை தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்சனையாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு தொடர்பாக எடுத்த முடிவுக்கு தி.மு.க. துணை போனது. இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழக மக்களுக்கும், மீனவர்களுக்கும் கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்த கூட்டணியாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி உள்ளது.

    இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். மீனவ மக்களின் வாக்கு அவர்களுக்கு கிடைக்காது. தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி உள்ளது. 10 வருட காலம் மோடி அரசின் சாதனை எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமையும். இந்த வெற்றியானது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.

    இவர் அவர் பேசினார்.

    • ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.
    • வேட்பாளர்கள் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி 4 பிராந்தியங்களாக உள்ளது.

    தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்கள் உள்ளன. காரைக்கால் மாவட்டம் தலைநகரான புதுச்சேரியில் இருந்து 132 கி.மீ. தூரத்தில் தமிழகத்தின் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மத்தியில் உள்ளது.

    மாகி பிராந்தியம் 614 கி.மீ. தூரத்தில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே அரபிக்கடலோரம் உள்ளது. மற்றொரு பிராந்தியமான ஏனாம் 822 கி.மீ. தூரத்தில் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.

    புதுச்சேரியில் இருந்து மாகி செல்ல 15 மணி நேரமும், ஏனாம் செல்ல 18 மணி நேரமும் சாலையில் பயணிக்க வேண்டும். பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இங்கு சென்று பிரசாரம் செய்ய பல்வேறு சிரமம் உள்ளது. கால விரயமும் ஏற்படும்.


    தமிழகம், புதுச்சேரியில் முதல்கட்டமாக வருகிற 19-ந் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. இதனால் குறைந்த நாட்களே பிரசாரத்துக்கு அவகாசம் உள்ளது. வேட்பாளர்கள் 15 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்ய முடியும்.

    இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு 3 மாநிலங்களில் பரவியுள்ள புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் சிரமத்தை கவனத்தில் கொண்டு கட்சி தலைமை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

    ஏனாம், மாகி, காரைக்கால் பிராந்தியங்களுக்கு பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் விரைவாக சென்று பிரசாரம் செய்ய கட்சி தலைமை ஹெலிகாப்டர் வழங்கியுள்ளது. புதுச்சேரிக்கு நாளை (புதன்கிழமை) தனியார் நிறுவன ஹெலிகாப்டர் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

    அங்கிருந்து தேவைப்படும் நேரத்தில் ஹெலிகாப்டரை நமச்சிவாயம் பயன்படுத்தி மற்ற பிராந்தியங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய கட்சித்தலைமை ஏற்பாடு செய்துள்ளது. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையால் பா.ஜனதாவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுகிறேன்.
    • புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை.

    ராமேசுவரம்:

    தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தனியாக தேர்தல் களம் காண்கிறார். கட்சி, சின்னம் முதல் கரை வேட்டி வரை அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் அவர் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க தானே களத்தில் இறங்குகிறேன் என்று கூறி ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் காரைக்குடியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பணியாற்ற நிர்பந்திக்கப்பட்டேன். அப்போது துணை முதலமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் அந்த பதவியில் எனக்கு விருப்பமில்லை. அந்த பதவியில் எந்த அதிகாரமும் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதலமைச்சர் பதவியை ஏற்று கொண்டேன்.

    ஆனால் எனது அரசியல் வாழ்வை அழிக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து சதி செய்தனர். அ.தி.மு.க.வை மீட்க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுகிறேன். புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ராமநாதபுரம் தொகுதியை பொறுத்த வரை இங்கு ஏற்கனவே பிரதமர் மோடி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். எனவே பிரதமர் மோடியே போட்டியிடுவதாக நினைத்து பாரதிய ஜனதா தொண்டர்கள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக மக்கள் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுகிறார்கள் ஆனால் உண்மையான ஹீரோ மோடி தான். அவரால் தான் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு சாத்தியமாயிற்று.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இருவரும் ஒருவர் மற்றவரின் தவறுகளை மறைக்க வேலை செய்கிறார்கள்.
    • கேரளாவில் பா.ஜனதா தொண்டர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவர்களது ஆர்வம் ஒப்பிடமுடியாதவை.

    திருவனந்தபுரம்:

    தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமான வெற்றியை பெற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் மற்றம் கேரளத்தில் ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று நமோ ஆப் மூலம் கேரளாவில் உள்ள பா.ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் பேசினார். அப்போது மோடி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் கேரளாவில் ஒருவரையொருவர் எதிர்த்து போராடினாலும் மற்ற மாநிலங்களில் பா.ஜனதாவை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். இதனை நீங்கள் மக்களிடம் கொண்டு சென்று அவர்களது இரட்டை வேஷத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

    இருவரும் ஒருவர் மற்றவரின் தவறுகளை மறைக்க வேலை செய்கிறார்கள். இது கேரளாவில் விளையாடும் ஆட்டம். கேரள மக்கள் படித்தவர்கள், இதுபற்றி அவர்களுக்குத் தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் தெரிவிக்க வேண்டும். அவர்களது ஊழலை மறைக்க தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கொள்ளையடிக்கும் மோசடிகளில் ஈடுபடுவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.

    கேரளாவில் கருவண்ணூர் வங்கி மோசடி வழக்கில் கம்யூனிஸ்டு உயர் தலைவர்கள் சம்பந்தப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள். அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட பணம் டெபாசிட்தாரர்களுக்கு திருப்பித் தரப்படும்.

    சாவடி மட்டத்தில் வெற்றி என்பதை தாரக மந்திரமாக கொண்டு தொண்டர்கள் செயல்பட வேண்டும். கேரளாவில் பா.ஜனதா தொண்டர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், அவர்களது ஆர்வம் ஒப்பிடமுடியாதவை. கேரள பயணத்தின் போது நான் பார்த்த ஆற்றலும் உற்சாகமும் மாநிலம் புதிய சாதனையை படைக்கும் என்பதை நம்ப வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு ஆயத்த கூட்டங்களுக்கு முதல்வர் சர்மா தலைமை தாங்கினார்.
    • பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாநிலத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 3ம் தேதி செல்கிறார். அங்கு, 11 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    பிரதமரின் வருகைக்கு முன்னதாக பல்வேறு ஆயத்த கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதாக அம்மாநில முதல்வர் சர்மா கூறினார்.

    இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "அசாம் மக்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்ற எங்கள் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதில் பெரிய கவுரவமாக கருதி, மிகுந்த மகிழ்ச்சியுடன் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

    11,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்" என்றார்.

    மேலும், பிரதமரின் திட்டமிடப்பட்ட பயணத்தை கருத்தில் கொண்டு முதல்வர் சர்மா தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தியதாக முதல்வர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    • அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சலுகைகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டு உள்ளது.
    • விடுதலை பெற்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் பிரதமராக இருந்துள்ளார்கள்.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திருமணம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, அவர் கூறியதாவது:-

    அரசியல் என்பது வாழ்வியல், அது இல்லாமல் எதுவும் கிடையாது. இந்த திருமணத்தில் மணமகன், இந்து பெண்ணை திருமணம் செய்துள்ளார். நேற்று வரை மணப்பெண்ணின் பெயர் வேறு, அவருடைய மதம் வேறு, வழிபாடு வேறு. இன்றைக்கு அவர் பெரும்பான்மையில் இருந்து சிறுபான்மை. இவ்வாறு சொன்னால் உங்களுக்கு கோபம் வருதா இல்லையா? எனக்கு கோபம் வரணுமா இல்லையா? அதனால்தான் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று கூறினேன்.

    மதம் மாறக்கூடியது. அவளை தமிழச்சி என்பதை மாற்ற முடியுமா? அவளின் மொழியும், இனமும் தமிழர் என்பதை மாற்ற முடியுமா? பெரியார் சொன்னது போல் நான் பேசுவதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள், கெட்டது இருந்தால் விட்டு விடுங்கள்.

    அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இன மக்களுக்கு சலுகைகள் மட்டும் தான் கொடுக்கப்பட்டு உள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் பிரதமராக இருந்துள்ளார்கள். ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்பு பதவியை அப்துல்கலாமிற்கு கொடுத்தார்கள். இந்த நிலத்தில் சிறுபான்மையினருக்கு தேவைப்படுவது உரிமை, சலுகைகள் அல்ல. என்னை எப்போது நீங்கள் நம்ப போறீங்க என்று தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும். ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • பிரதமர் மோடி இம்மாதம் 21-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்.
    • அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    வாஷிங்டன் :

    பிரதமர் மோடி இம்மாதம் 21-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின்பேரில் அவர் செல்கிறார்.

    22-ந் தேதி, அவர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அன்று இரவு, ஜோ பைடனும், ஜில் பைடனும் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கிறார்கள்.

    23-ந் தேதி, அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    இத்தகவலை அமெரிக்க இந்திய சமுதாய தலைவர் டாக்டர் பாரத் பராய் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    அமெரிக்காவில் சிகாகோவில் ஒரு பிரமாண்ட அரங்கத்தில் 40 ஆயிரம் இந்தியர்களிடையே பிரதமர் மோடியை உரையாற்ற வைக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், நிகழ்ச்சி நிரல் உறுதி செய்யப்படாததால், அதை இறுதி செய்ய முடியவில்லை.

    இறுதியாக, 23-ந் தேதி மாலையில், எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். எனவே, வாஷிங்டனில் உள்ள ரொனால்டு ரீகன் கட்டிடம் மற்றும் சர்வதேச வர்த்தக மையம், பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த அரங்கம், 900 இருக்கை வசதி கொண்டது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

    23-ந் தேதி மாலை, அமெரிக்க இந்தியர்களிடையே அங்கு பிரதமர் மோடி உரையாற்றுவார். அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    இந்தியாவின் வளர்ச்சி பாதையில் வெளிநாட்டு இந்தியர்களின் பங்கு குறித்து அவர் பேசுவார். அத்துடன், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்புவார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 25 பிரபலங்களை கொண்ட தேசிய அமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடி வருகை குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2 அமெரிக்க எம்.பி.க்கள் பேசினர்.

    ரிச் மெக்கார்மிக் என்ற எம்.பி. பேசியதாவது:-

    பிரதமர் மோடியின் முக்கிய வருகை குறித்து பேச இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். உலகில் நாம் கொண்டுள்ள முக்கியமான உறவுகளில் இதுவும் ஒன்று. இருநாடுகளிடையே நல்லெண்ணத்தை பரப்ப அந்த மனிதர் அமெரிக்கா வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜோ வில்சன் என்ற எம்.பி. பேசுகையில், ''அமெரிக்க-இந்திய நட்புறவு குறித்து பிரதமர் மோடி தனது முந்தைய பயணத்தில் விளக்கி கூறியுள்ளார்'' என்றார்.

    • பிரதமரின் பட்டச்சான்றிதழ் பிரச்சினையை எழுப்பியவுடன், ஒட்டுமொத்த பா.ஜனதாவினரும் அதிர்ந்துள்ளனர்.
    • விசாரணை நடத்தப்பட்டால், பிரதமர் மோடியின் பட்டச்சான்றிதழ் ‘போலி’ என்று அம்பலமாகி விடும்.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் ஐகோர்ட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

    இந்நிலையில், அவரது ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யும், தேசிய செய்தித்தொடர்பாளருமான சஞ்சய்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் என்று அமித்ஷா கடந்த 2016-ம் ஆண்டு ஒரு சான்றிதழை காண்பித்தார். அதில், 'யுனிவர்சிட்டி' என்ற ஆங்கில வார்த்தையின் எழுத்துகள் 'யுனிபர்சிட்டி' என்று தவறாக உள்ளது. அது போலி என்பதற்கு அதுவே ஆதாரம்.

    பிரதமர் மோடியே கடந்த 2005-ம் ஆண்டு குஜராத்தில் பேசுகையில், பள்ளிக்கல்விக்கு பிறகு தன்னால் மேல்படிப்பு படிக்க முடியவில்லை என்றார். அவர் எம்.ஏ. படித்திருந்தால், அப்படி பேசியது ஏன்?

    பிரதமரின் பட்டச்சான்றிதழ் பிரச்சினையை எழுப்பியவுடன், ஒட்டுமொத்த பா.ஜனதாவினரும் அதிர்ந்துள்ளனர். சான்றிதழ் போலி இல்லை என்று நிரூபிக்க போராடுகின்றனர்.

    விசாரணை நடத்தப்பட்டால், பிரதமர் மோடியின் பட்டச்சான்றிதழ் 'போலி' என்று அம்பலமாகி விடும். பின்னர், தேர்தல் கமிஷனுக்கு தவறான தகவல் அளித்து மோசடி செய்ததாக அவர் தனது எம்.பி. பதவியை இழப்பார்.

    அத்துடன், தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் அவர் இழந்து விடுவார். இதுதான் தேர்தல் கமிஷன் விதிமுறை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா- தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • ரெயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 திட்டப்பணிகளை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உள்பட, ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திட்டபணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக பிரதமர் மோடி நாளை கொல்கத்தா செல்ல உள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹவுரா மற்றும் நியூ ஜகல்பூரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா- தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ரெயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 திட்டப்பணிகளை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் நாளை அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காங்கிரசாரின் வெறுப்புணர்வுக்கு கார்கேயின் பேச்சே உதாரணமாகிறது.
    • கார்கே கூறியது கண்டனத்துக்கு உரியது.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டசபை தேர்தல், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (டிசம்பர் 1-ந் தேதி) முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

    ஆமதாபாத் நகரில் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

    அனல் வீசிய அவரது பேச்சில், பிரதமர் மோடியை, ராவணனுடன் ஒப்பிட் டார். அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி, மக்களிடம் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு, உங்கள் கண்களில் என் முகத்தை நிறுத்தி, பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கள் என்கிறார். நாங்கள் எத்தனை முறைதான் உங்கள் முகத்தைப் பார்ப்பது? உங்கள் முகத்தை மக்கள் மாநகராட்சி தேர்தலில் பார்க்கிறார்கள். அடுத்து சட்டசபை தேர்தலின்போது பார்க்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலின்போதும் பார்க்கிறார்கள். எல்லா இடங்களிலும் உங்கள் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஏன்? உங்களுக்கு எத்தனை முகங்கள் இருக்கின்றன? நீங்கள் என்ன 100 தலைகளைக் கொண்ட ராவணனா?

    இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

    இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    குஜராத் முதல்-மந்திரி பூபேஷ் படேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "குஜராத் மக்கள் மீதான அவர்களின் (காங்கிரசாரின்) வெறுப்புணர்வுக்கு கார்கேயின் பேச்சே உதாரணமாகிறது. அவர்கள் நடந்துகொள்ளும் விதத்துக்காக இந்த முறையும் குஜராத் மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்" என கூறி உள்ளார்.

    இதை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா சாடி உள்ளார்.

    அவர், "காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் கருத்துகளை பிரதிபலிக்கிறார் கார்கே. 2007-ல் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலின்போது சோனியா, மோடியை மரண வியாபாரி என அழைத்து இத்தகைய தனிப்பட்ட தாக்குதலை தொடங்கினார். கார்கே கூறியது கண்டனத்துக்கு உரியது. அவரது வார்த்தைகள், பிரதமர் மோடி மீதான அவமதிப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு குஜராத்தி மீதான அவமதிப்பும் ஆகும்" என தெரிவித்தார்.

    ×